தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 மாஸ்க் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் மனநல அறிவுரைகள் வழங்க சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மொத்தமுள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு முகக்கவசம் என மொத்தம் சுமார் 13 கோடி முகக்கசவம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கடந்த மாதம் அறிவித்தார். அந்தபணி மிக விரைவில் தொடங்கப்படும். குறைந்த விலையில் தரமான மாஸ்க் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.