தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்த காலத்திலிருந்தே திரையரங்குகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் நஷ்டத்தில் இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு கொடுத்துள்ள தளர்வில் திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற பல கேள்விகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
“வெளிநாடுகள் போன்று திரையரங்குளில் ஒரு வரிசையில் இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கும் முறையால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது என்றும், திரைப்படத்துறையினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருவதாகவும் கூறினார்.
கொரோனா பரவல் நிலைமையை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் எனக் கூறிய கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.