கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான 3 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 15 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 18
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: வட்டார இயக்க மேலாளர்கள்
காலியிடங்கள்: 03
தகுதி: இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இதுபோன்ற திட்டங்கலில் பணி அனுபவம் உள்ளவர்கள், சிறந்த தலைமைப் பண்பு மற்றும் தகவல் தொடர்பாளர், கணினி இயக்குநவதில் நல்ல திறமை உடையவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் மதிப்பூதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.
பணி: வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
காலியிடங்கள்: 15
தகுதி: பிளஸ் 2 தேர்வு மற்றும் அதற்கு மேலான தகுதி பெற்றவர்கள், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பவர்கள், தகவல் தொடர்பு, கணினி இயக்குவதில் திறமையானவர்களாக இருக்க வேண்டும்.]
சம்பளம்: மாதம் மதிப்பூதியமாக ரூ.12,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம் கரூர்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 07.04.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய https://karur.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2022/03/2022033071.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.