24-03-2023 4:29 AM
More
    Homeதமிழகம்குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கருப்புச் சட்டையுடன் ஸ்டாலின்!?

    To Read in other Indian Languages…

    குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கருப்புச் சட்டையுடன் ஸ்டாலின்!?

    stalin in black shirt - Dhinasari Tamil

    கர்நாடக மாநில முதல்வராக புதன்கிழமை பதவி ஏற்கிறார் மஜத., தலைவர் குமாரசாமி. அதற்கு முன்னதாக, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுப் போனார் குமாரசாமி.

    காவிரி பாயும் மைசூர் மாண்டியா பகுதியில் புகழ் பெற்றது ஸ்ரீரங்கப்பட்டணம். காவிரி ஆறு அங்கே சிறிய ஆறாக, ஆனால் நீர் வளம் மிகுந்து பாய்கிறது. அதன் பின்னர் கேஆர் எஸ் எனப்படும் கிருஷ்ணராஜசாகர் அணை கட்டப்பட்டு, காவிரி நீர் தேக்கி வைக்கப் படுகிறது.

    காவிரிப் பிரச்னை மாண்டியா பகுதியில் மட்டுமே எதிரொலிக்கும் ஒரு பிரச்னையாகத் திகழ்கிறது. அதனாலேயே காவிரி விவகாரத்தில் மிகக் கடுமையான காழ்ப்பு உணர்வுடன் தமிழர்கள் குறித்த மோசமான சொல்லாடல்களை உதிர்த்தார் குமாரசாமி. அதற்கு ஏற்ப, கர்நாடகத்தில் வடக்கு, மேற்குக் கடற்கரைப் பகுதி, மத்திய கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் பலம் வாய்ந்த வேட்பாளர்களை முன்னிறுத்தி வெற்றி பெற்றது பாஜக. ஆனால், மாண்டியா பகுதியில் காவிரியும் கன்னடமும் என பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்த குமாரசாமியால், காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி முன்னரே டம்மி வேட்பாளர்களை நிறுத்தியது பாஜக. எதிர்பார்த்தது போலவே முடிவுகள் அமைந்தாலும், பாஜக., எதிர்பார்க்காத திடீர் திருப்பத்தை குமாரசாமி ஏற்படுத்தி விட்டார்.

    தேர்தலுக்கு முன்னர் வரை காங்கிரஸை காறித் துப்பி வந்த குமாரசாமி, தேர்தலுக்குப் பின்னர் வேறு வழி இல்லாததால், பதவி ஆசையில் காங்கிரஸ் கொடுத்த வாய்ப்பை மண்டியிட்டு ஏற்றுக் கொண்டார். அதுவரை, காங்கிரஸுக்கும் குமாரசாமிக்கும் முட்டுக் கொடுத்து வந்த திமுக., தேர்தல் நேரத்தில் பாஜக.,வை எதிர்த்தே தமிழகத்தில் அரசியல் செய்ததே தவிர, குமாரசாமியை கண்டித்தோ, காங்கிரஸை எதிர்த்து ஒரே ஒரு வார்த்தை சொல்லியோ அரசியல் செய்யவில்லை.

    தமிழகம் வந்த மோடிக்கு கறுப்புக் கொடி காட்டினர் திமுக.,வினர். ஸ்டாலின் இதற்காக தனிப்பட்ட வகையில் களம் இறங்கி, காங்கிரஸுக்கு ஆதரவாக அரசியலைச் செய்து வந்தார். பாஜக.,வினர் பினாமி என்று ஆளும் அதிமுக., அரசை குற்றம் சாட்டிய ஸ்டாலின், காவிரியில் தொடங்கி, ஈழத் தமிழர் படுகொலை, தமிழர் விரோத கொள்கைகளுடன் திகழ்ந்த காங்கிரஸின் அடிவருடியாக தாம் செயல்படும் செயல் தலை என மற்றவர் விமர்சிப்பதை ஒருபோதும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

    அதை உறுதிப் படுத்தும் விதத்தில், எடியூரப்பா வெற்றி பெற்று முதல்வர் ஆகும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், காவிரி நீரைத் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரினார். ஆனால், எடியூரப்பா ராஜினாமா செய்து, குமாரசாமி முதல்வர் ஆகும் நிலையில், அவருக்கு வெறுமனே வாழ்த்து தெரிவித்து, மதசார்பற்ற கட்சிகளுக்கு இது உத்வேகம் அளிப்பதாகக் கூறி காவிரியை மறந்து ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.

    இந்த நிலையில், குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு தேவேகவுட அழைப்பு அனுப்பியதை அடுத்து, ஸ்டாலின் அதில் கலந்து கொள்ளவுள்ளார். தமிழகத்துக்கும் தமிழருக்கும் இத்தனை துரோகங்கள் செய்து, தமிழரை கேவலப்படுத்திய குமாரசாமிக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பதவி ஏற்பு விழாவில் ஸ்ஆலின் கருப்புச் சட்டையுடன் பங்கேற்பாரா என்று தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    அதில் ஒரு கருத்து…

    குமாரசாமி தான் ஒரு ஆண்பிள்ளைன்னு நிரூபிச்சுட்டான். தமிழகத்துக்குள்ளேயே வந்து… காவிரி நீர் தரமுடியாதுன்னு தெனாவட்டா கொக்கறிச்சுட்டுப் போயிட்டான்.

    ஸ்டாலின் உண்மையான ஆண் பிள்ளையா இருந்தா குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்போது கருப்புச்சட்டை அணிந்து கொண்டு காவிரி நீர் தமிழகத்துக்கு தந்தே ஆக வேண்டும் என்று சொல்ல வேண்டும். இல்லை யென்றால் சுங்கிடி சேலையை கட்டிக் கொள்ள வேண்டும்.

    கர்நாடக திமுக, விசிக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் அட்லீஸ்ட் கறுப்பு பலூனாவது பறக்க விடுவார்களா?

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    2 COMMENTS

    1. இவன் அரசியல் விபச்சாரி. ஆகவே நிர்வாணமாக கூட போக ரெடி. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்க மற்றும் கருப்பு உடுப்பு அணியமாட்டான். வேண்டுமானால் கருப்பு ஜட்டி அணிந்து இருந்ததாக பின்னர் தமிழர்களிடம் கூறுவான்.

    2. இவர்கள் கருப்பு சட்டை நாடகம் குமாரசாமியுடன் ஒப்பந்தம் போட்டு காவேரி விவகாரத்தை திசை திருப்பும் நோக்கமே,
      காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகளை மறைக்கவும், சித்தராமையாவை காப்பாற்றவும் காங்கிரஸ் 78ஐ 38ல் அடமானம் வைத்துள்ளது

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    three × 4 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,631FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...