ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ, அவர் தான் அடுத்த பிரதமர் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திமுக ஆட்சியின் போது தமிழகத்தில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் அதிமுக அரசு அறிவித்த திட்டங்கள் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் துரைமுருகன் குற்றம்சாட்டினார்