சென்னை : நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று தென்காசி தொகுதியில் தாம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.
தென்காசியில் இன்று கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறப் பட்டுள்ளது.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.@DrKrishnasamy @DrShyamKK pic.twitter.com/qe2g5HfnFx
— புதிய தமிழகம் கட்சி (@PTMparty) March 25, 2019