நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள கேமரா நேற்று பூமியை படம் பிடித்து அனுப்பியது. அதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பதிவுகளில் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளது. தற்போது 4வது புவி வட்டப்பாதையை வெற்றிகரமாகக் கடந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை நோக்கி பயணித்து வருகிறது சந்திரயான் 2.
வரும் ஆக.6 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள எல்ஐ4(LI4) கேமரா, பூமியை படம் எடுத்து அனுப்பியுள்ளது.
இந்தப் படங்களை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
#ISRO
Earth as viewed by #Chandrayaan2 LI4 Camera on August 3, 2019 17:37 UT pic.twitter.com/8N7c8CROjy— ISRO (@isro) August 4, 2019