இந்த போட்டோவில் வலதுபுறம் இருக்கும் பெண்ணை கவனித்தீர்களா? அவர் புடவையை நகர்த்தி கையில் எதை காட்டுகிறார்?
இந்த பெயிண்டிங்கை கவனமாகப் பாருங்கள். இதில் இருக்கும் மூவரும் அரச குலத்தைச் சேர்ந்த அழகான பெண்கள். மிக ஒய்யாரமாக போஸ் கொடுத்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தன் புடவைத் தலைப்பை நகர்த்தி கையில் எதையோ காட்டுகிறார். அது என்னவென்று பார்ப்போம்!
சாதாரணமாக போட்டோ எடுக்கும் போது புடவையை சரி செய்து கொண்டு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் பெயிண்டிங்கில் எவ்வாறு இவ்விதம் நடந்தது?
உண்மையில் இந்த பெயிண்டிங் பின்னால் ஒரு பெரிய செய்தி உள்ளது.
19வது நூற்றாண்டில் இந்தியாவில் அம்மை நோய் பரவலாக இருந்தது. அம்மை நோயால் மக்கள் பரிதவித்தனர். அந்த நேரத்தில் மைசூரில் பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்து வந்தது. அப்போது மைசூரை ஆண்டு வந்த மார்க் வில்கேஸ் என்பவர் மக்களுக்கு பிரிட்டிஷ் வாக்சின் போட வேண்டும் என்று ஆணையிட்டார். ஆனால் அப்போது கூட இப்போது இருப்பது போலவே புகார்கள் எழுந்தன. பிரிட்டிஷ் தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து என்று மக்கள் எண்ணத் தொடங்கினார். பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயங்கினார்.
அப்போது இந்த போட்டோவில் வலதுபுறம் உள்ள தேவஜமணி என்ற இளவரசிக்கு திருமணத்திற்கு நிச்சயமாகி இருந்தது. அவர் மைசூர் இளவரசரின் மணப்பெண். அந்த நேரத்தில்தான் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு இந்த ஓவியத்திற்கு போஸ் கொடுத்து அனைவரும் வாக்சின் போட்டுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த பெயிண்டிங் மூலம் தானும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டதாக தெரிவிக்கிறார். மைசூர் அரசாங்கத்தின் வரப்போகும் ராஜாவுக்கு மணமுடிக்க போகும் பெண்ணே தைரியமாக போட்டுக் கொண்டுள்ளார். மக்கள் கூட முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காகவே இந்த பெயிண்டிங்கை இவ்வாறு சித்திரித்துள்ளார்கள்.