(அவரோட பதிவை அப்படியே இங்கே பகிர்றேன். இன்னிக்கு என்னென்ன நடக்கப் போகுதோ…
எத்தனை திட்டு, எத்தனை வசவு, எத்தனை முறைப்பு வரப் போகுதோ….
ஆமாம்..ஆமாம்.. இருந்தாலும் ..
லேசா உதறுதில்ல….
வாசுதேவரே…நீங்களே துணை..)
பெண்கள்.
திருமணமான புதிதில்
- கணவர் கூப்பிடாத போதே…
“என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்”. -
“எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்”
-
“உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.”
-
“எனக்குப் புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்’.
-
“அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.”
6 .”உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.”
7.” நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு”.
- “உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க”.
-
“ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி. போகலாம் பா.”
சிறிது ஆண்டுகள் கழித்து
1.”நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க. பக்கத்தில் வந்து சொல்லிட்டுப் போனா என்ன?”
- “நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??”
-
“எனக்குக் கோஸ் பொரியல். உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?”
-
“இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ?.”
-
“ம்ம்ம். உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.”
-
“எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு”.
-
“எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!”
-
“உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?” -
“கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க”.
பல ஆண்டுகள் கழித்து
-
காதில் வாங்குவதே இல்லை.
-
போறவளுக்கு வர்ற வழி தெரியும். யாரும் வர வேண்டாம்
-
இன்னைக்குக் கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
-
ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
-
உங்களைப் பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
-
போதும். போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
-
எப்ப பார்த்தாலும் என்ன ஈ…? வாயை மூடுங்க. கொசு போய்டப் போது.
-
உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
-
சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
நன்றி : திரு.வாசுதேவன் அவர்கள்.