சில ஆண்டுகளுக்கு முன்பு வரை … ஆடம்பரமாக, ஊரில் உள்ள பெரும் செல்வந்தர்கள் வீட்டில் நடக்கும் திருமணம் என்றால் நாம் ஆச்சரியமாக பார்ப்போம். அதுவும் சொகுசு காரில் வந்து இறங்குவது, வெளியூர் அல்லது பிரபலமான குழுவின் பாட்டுக் கச்சேரி என தூள் பறக்கும் திருமணத்தைப் பார்க்கும் போது.. அது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
ஆனால் திருப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பம் இதையெல்லாம் செய்யாமல் முற்றிலும் இயற்கையான முறையில் உணவு கொடுத்து, இயற்கை உணவுத் திருமணம் என நம்மை ஆச்சரியப்பட வைத்துவிட்டது.
திருமணத்தில் உணவுக்காக வந்த காய்கறிகள் அனைத்தும் தன் தோட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் விளைவித்தது தான். மேலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்துவதால் அதன் சத்துக்கள் எல்லாம் போய்விடும் என்பதால் நேரடியாக மழை நீரை சேமித்து வைத்து அதைத் தான் உணவு தயாரிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தியுள்ளார்.
மேலும் இந்தத் திருமணத்திற்கு வரும் குழந்தைகள் விளையாட பனை நுங்கு வண்டியை தயார் செய்து வைத்திருந்தார். இவரது திருமணத்திற்கு சென்றவர்கள் எல்லாம் இதைக் கண்டு பெரும் வியப்பிற்கு உள்ளாகி விட்டனர்.
இவ்வாறு ஆரோக்கியத்தையும், உடல்நலனையும் மையமாகக் கொண்டு விழிப்பு உணர்வுடன் நடந்த இந்தத் திருமணம் பலரை கவர்ந்து விட்டது.
- கே.சி.கந்தசாமி