கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டநிலையில் மழை மேகங்களால் சூரிய உதயம் அஸ்தமனம் பார்க்கமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற படைத்தனர்.
உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரியில் கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி என்பதால் அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் படகுமூலம் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இன்று அதிகாலையில் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீர் என்று தாழ்வானது, மறுபுறம் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டதால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது. இதனால் ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கன்னியாகுமரியில் மற்றும் ஒரு சிறப்பு இங்கு சூரிய உதயம் அஸ்தமனம் இரண்டையும் சம பார்த்து ரசிக்கலாம்.இன்றுபௌர்ணமி என்பதால் சூரிய அஸ்தமனம் நிலவுஉதயம் பார்க்க கன்னியாகுமரியில் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது.இன்று மழை மேகங்களால் சூரிய உதயம் அஸ்தமனம் பார்க்கமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற படைத்தனர்.