தினம் ஒரு மோடி – சோர்வின்றி உழைக்கணும், சுமையாக இருக்கக்கூடாது
என் தேசத்தையும், தேசத்தில் இருக்கும் மக்களையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். அதனால் என்றாவது உடல் சோர்ந்தாலும் அதையும் மீறி என்னால் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடிகிறது. அதே நேரத்தில், நான் என் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் கொண்டுள்ளேன், நாம் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது, இப்படியே சுறுசுறுப்பாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே வேலை செய்துக் கொண்டு இருக்கும் நிலையிலேயே இவ்வுலகை விட்டு போய் விடவேண்டும்.
இளைஞர்களே! நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், சுறுசுறுப்பாக இருங்கள் என்று பிரதமர் மோடி அவர்கள் தமிழில் கூறுவதைக் கேட்போம்..