spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்மதவெறியால்... மகளுக்கு நரகத்தைக் காட்டிய 'சாத்தான்'கள்!

மதவெறியால்… மகளுக்கு நரகத்தைக் காட்டிய ‘சாத்தான்’கள்!

- Advertisement -

அந்த டைரியைப் படித்த போலீசாருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! அப்படி என்ன அந்த டைரியில் எழுதப்பட்டிருந்தது?

பிரேசில் போலீசாருக்கு கிடைத்த ஒரு 11 வயது சிறுமியின் டைரி அவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

கிழக்கு பிரேசில் ‘உபாடுடா’ வைச் சேர்ந்த ‘பேரோலா பைர்ஸ்’ என்ற சிறுமி அண்மையில் மரணமடைந்தாள்.

அவளுடைய உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரோலா நீண்டகாலமாக உடலளவில் சித்திரவதைக்கு ஆளாகி உள்ளதாக அவர்கள் கண்டறிந்தனர். அவளுடைய உடலில் உணவு கலோரிகள் புரோட்டின் சதவீதம் மிகமிக குறைந்துள்ளதாக கண்டுபிடித்தனர்.

அதனால் பெரோலாவின் தாய் ‘அலைன்’, அவளுடைய இரண்டாவது கணவர் ‘என்ரீ’ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து விசாரணை செய்ததில் உடல் ஒத்துழைக்காததால் பெரோலா 5 மாதங்களாக பள்ளிக்கூடம்கூட செல்லவில்லை என்பது தெரிந்தது.

அவள் வீட்டை சோதனையிட்ட போது ஒரு அறையின் மூலையில் ஒரு சிறிய பாயும் அதன் மீது இரு ஜோடி உடைகளும் இருப்பதை பார்த்தனர் . அவை பெரோலாவுடையதே என்று போலீசார் கண்டறிந்தனர். அங்கே அவர்களுக்கு ஒரு 300 பக்க டைரி கிடைத்தது.

அதில் அந்த சிறுமி தான் தினமும் அனுபவித்த நரக வேதனையை வர்ணித்துள்ளாள். பெற்றோர் தனக்கு பல நாட்களாக உணவு அளிக்காமல் உடற்பயிற்சி செய்விப்பார்கள் என்று டைரியில் எழுதி உள்ளாள். அதனால் பசியோடு பல இரவுகள் தூங்காமல் கழித்ததாக குறித்துள்ளாள்.

அந்த முன்னூறு பக்கங்களையும் படித்த போலீசார் கண்ணீர் விட்டனர்.

பெரோலாவைப் போலவே நரக வேதனைக்கு ஆளான அவளுடைய எட்டு வயது தம்பியையும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பெரோலாவின் மரணத்திற்கு அவள் பெற்றோரே காரணம் என்று வழக்கு பதிவு செய்தனர்.

ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று அலைன், என்ரீயை வினவியபோது, “தற்போது உலகம் சரியாக இல்லை. சிறு வயது முதலே நல்லது எது கெட்டது எது என்பதையும் இறைவன் மேல் பயத்தையும் போதிக்க வேண்டும். அவர்களின் ஆன்மாவையே பரிசுத்தம் செய்ய வேண்டும். அதற்கு உபவாசம் ஒன்றுதான் வழி. அதனால்தான் அப்படிச் செய்தோம்” என்று பேற்றினார்கள்.

மதவெறி பிடித்த அவர்களின் பதிலை கேட்ட போலீசார் இவர்களின் மதவெறியால் தான் பதினோரு வயது பெண் நரகம் அனுபவித்து இறந்தாள் என்று கண்டறிந்தனர். அதை அறிந்த உள்ளூர்வாசிகள் வருத்தம் அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe