இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது அங்குள்ள மாவட்டம் நீதிமன்றம் ஒன்று. 2007 ஆம் ஆண்டு லால் மஸ்ஜித் (சிவப்பு மசூதி) நடவடிக்கையின் போது மத தலைவர் அப்துல் ரஷீத் மற்றும் அவரது தாயைக் கொன்றதாக முஷாரப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இஸ்லமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி, முஷாரப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை நிராகரித்து முஷாரப்புக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தது. இந்த வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினம் அவரைக் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
முஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari