கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் பல நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாததால் பல முக்கியமான தருணங்களில் கூட பங்குபெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது அமெரிக்காவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்னுடைய மகனுக்கு பிறந்த முதல் குழந்தையைக் காண்பதற்காக முதியவர் ஒருவர் 6 கி.மீ நடந்தே சென்றுள்ளார்.
அதுவும் அந்த குழந்தையை ஜன்னல் வழியாக மட்டுமே பார்த்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உள்ள அனைவரும் தங்களைத் தாங்களே மிகவும் கவனமாக தற்காத்துக்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் வெளியாட்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டது. அதனால்தான் அந்த முதியவர் ஜன்னல் கண்ணாடி வழியாக தன்னுடைய முதல் பேத்தியை பார்த்துள்ளார்.
இது குறித்து அவரது மகன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய முதல் குழந்தையை பார்ப்பதற்காக தன் அப்பா இவ்வளவு தூரம் நடந்துவந்துள்ளார் எனவும் ஆனால் அவரால் குழந்தையை தூக்க கூட முடியவில்லை எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
எனினும் இந்த நிலை கூடிய விரைவிலேயே சரியாகிவிடும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.