― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப தொடர்பான ஒப்பந்தம்! அமெரிக்கா முடிவு!

இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப தொடர்பான ஒப்பந்தம்! அமெரிக்கா முடிவு!

- Advertisement -

இந்தியாவுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் வகையில், இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்படுவது, போர் விமானத் தயாரிப்பில் உதவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க பார்லி.,யின் செனட் சபையைச் சேர்ந்த, மார்க் வார்னர் மற்றும் ஜான் கார்னின், தேசிய ராணுவ அங்கீகார சட்டத்தில் திருத்தம் செய்யும், சில தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளனர். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மார்க் வார்னர், சபையின் உளவுத் துறைக்கான நிலைக் குழு துணைத் தலைவராக உள்ளார்.

ஜான் கார்னின், குடியரசு கட்சியின் கொறடாவாக உள்ளார். மேலும், பார்லி.,யின் இந்திய விவகாரங்களுக்கான குழுவிலும் இவர்கள் இடம் பெற்றுள்ளனர். தேசிய ராணுவ அங்கீகார சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதற்காக, இவர்கள் தாக்கல் செய்துள்ள தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா – இஸ்ரேல் இடையே உள்ளது போல், இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

இது குறித்து, ராணுவ அமைச்சர், மார்க் எஸ்பர் விளக்கம் அளிக்க வேண்டும்.ராணுவம் மற்றும் அது தொடர்பான தொழில்கள் மற்றும் தொழில்நுட்பத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, இரு நாடுகளுக்கு இடையே நிபுணர்களை பரிமாறிக் கொள்வது ஆகியவை குறித்து, ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தியாவின் ராணுவ தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சிகளுக்கு நிதி அளிப்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும். இந்தியா, தற்போது, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சுயமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தில், அமெரிக்கா உதவுவது குறித்து ஆராய வேண்டும்.

ராணுவ ஒத்துழைப்புக்கான, ‘நேட்டோ’ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒத்துழைப்பு அமைப்பில், இஸ்ரேல், நியூசிலாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளது போல், இந்தியாவையும் சேர்க்க வேண்டும்.அதன் மூலம், அமெரிக்காவின் உயர் ராணுவ தொழில்நுட்பங்கள், ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு செனட் உறுப்பினரான, ஜான் சுலிவான் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், ‘இந்தியாவின் ராணுவ பலத்தை உயர்த்தும் வகையில், அதனுடன் அதிக அளவில் போர் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.’போர் விமானங்கள் தயாரிப்பது உள்ளிட்டவற்றில், அதிக ஒத்துழைப்பு தர வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.செனட் சபையைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரான, கோரி கார்ட்னர் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், ‘சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version