பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘யூஎச்1டி’ ஹூய் ரக ஹெலிகாப்டர் ஒன்று 2 விமானிகள் உட்பட 5 ராணுவ வீரர்களுடன் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது