கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், தமிழர்களிடமிருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிப்பதில் முதல் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 425 ஏக்கர் நிலத்தை அதிபர் மைத்ரீபால சிறீசேன நேற்று தமிழர்களிடம் ஒப்படைத்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் வழங்கினார். அப்போது அவர், எனது ஆட்சியில் இனம், மத அடிப்படையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், போரில் அழிந்த வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டமைக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari