உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்களைச் சீண்டி அவர்களிடம் வம்பிழுப்பேன் என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன் கூறியுள்ளார். எப்போதுமே முக்கியமான போட்டிகளில் எதிரணியைச் சீண்டி, அவர்களை மன ரீதியாக நிலைகுலைய வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அந்த அணிக்கு இது ஒன்றும் புதிதல்லதான்! அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய முத்தரப்பு போட்டிகளில் மிட்செல் ஜான்சன், இந்திய வீரர் ரோஹித் சர்மாவை வம்புக்கு இழுத்தார். இதன் பின்னர் சக வீரர் டேவிட் வார்னரும் தகராறில் ஈடுபட்டார். ரோஹித் சர்மாவிடம், இங்க்லீஷில் பேசுங்கள் என்று வார்னர் நக்கலடித்ததாகவும், அதனால் வார்த்தைத் தகராறு முற்றி, நடுவர் வந்து தலையிட்டு, வார்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் நடந்தது. இந்நிலையில் நாளை சிட்னியில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய வீரர்களை வம்புக்கு இழுத்து சீண்டப் போவதாக மிட்செல் ஜான்சன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் மற்றும் வாட்சன் இடையே நடந்த ஸ்லெட்ஜிங் பிரச்னை ஆட்டத்தையே சுவாரஸ்யமாக மாற்றியது. அதுபோன்ற ஆட்டத்தையே நான் விரும்புகிறேன். விளையாட்டில், இதுபோல ஸ்லெட்ஜிங் செய்வது சகஜமானது. அப்போதுதான், விளையாட்டில் ஒரு திரில் இருக்கும். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இதுபோன்ற சுவாரசியத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வார்னர் எதுவும் பேசாமல் இருந்தாலும், நான் சீண்டத்தான் போகிறேன். ஸ்லெட்ஜிங் செய்யும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்திய வீரர்களைச் சீண்டி வம்பிழுப்பேன்: ஆட்டத்தில் ’த்ரில்’ வேண்டும் என்கிறார் மிச்சல் ஜான்சன்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari