15 வயது சிறுமியுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டதாக, இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணிக்காக 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆடம் ஜான்சன் கடந்த 2012ஆம் ஆண்டு சாண்டர்லேண்ட் அணிக்காக 10 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது ஆடம் ஜான்சன், இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் சாண்டர்லேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர் 15 வயது சிறுமியுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்ட குற்றத்துக்காக அவரை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சனை சஸ்பெண்ட் செய்வதாக சாண்டர்லேண்ட் அணி அறிவித்துள்ளது.
சிறுமியுடன் பாலியல் தொடர்பு: நட்சத்திர கால்பந்து வீரர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari