இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட், நான்காம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆட்டநேர முடிவில் இந்தியா ஆறு விக்கட்டுகள் இழந்து 181 ரன்கள் க்கு 6 (ரஹானே 61, புஜாரா 45, வூட் 3-40, அலி 2-52) மற்றும் 364 இங்கிலாந்து 391 க்கு 154 ரன்கள் முன்னிலை
இங்கிலாந்து ஆட்டத்தின் வேகத்தை முழுவதுமாக மாற்றி, நான்காவது நாள் முழுவதும் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி, இந்தியாவை மண்டையில் தட்டி மூலையில் உட்காரவைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சரியாக பந்து வீசாத மார்க் வுட் இரண்டாவது நாளில் இரண்டு விக்கெட்டு எடுத்தார். நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியா சுதரிப்பதற்கு முன்னர் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்வதன் மூலம் இந்தியாவை ஒரு கடினமான நிலைக்குத் தள்ளிவிட்டார்.
இத்தனைக்கும் வுட் காலையில் ஒரு பந்தைத் தடுக்கும்போது எல்லைக் கோட்டருகே கீழே விழுந்து காயமடைந்தார். ஆனால் இரண்டாவது புதிய பந்தில் மீண்டும் பந்து வீசத் தயாராக இருந்தார், மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. வுட் காயமடைந்ததால் மொயீன் அலி அதிகமாக பந்து வீச் வேண்டியதாயிற்று. அவர் குறிப்பாக ரஹானேவை தொந்தரவு செய்தார்,
இன்று அனேகமாக அனைவரும் புஜாராவையும் ரஹானேயையும் புகழ்ந்து தள்ளியிருக்க வேண்டிய நாள். ரோஹித், ராகுல், கோலி மூவரும் சரியாக விளையாடவில்லை. புஜாரா ஏறத்தாழ 33 ஓவர் விளையாடினார். ரஹானேயும் நீண்டநேரம் விளையாடினார். ஆணால் இரிவரும் அடுத்தடுத்து அவுட் ஆனது அவர்களின் விளையாட்டால் எந்த பயனும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவீந்தர் ஜடேஜா ஒரு அருமையான பந்தில் அவுட் ஆனார். இப்போது ரிஷப் பந்த் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொருத்து ஆட்டம் மாறும். ரிஷப் பந்த்-க்கு ஒரு நல்ல அதிர்ஷ்டமான வாய்ப்பு. இன்று அவர் வெற்றிகரமாக ஆடினால் அடுத்த 20 டெஸ்டுகளுக்கு அவரை அசைக்க முடியாது. சரியாக விளையாடவில்லை என்றால்.
எனவே இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக அமைய வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.