January 24, 2025, 4:29 AM
24.2 C
Chennai

ஜாமீனில் வெளிவந்தார் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா

டாக்கா:

வங்கதேச பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா, இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜியா தனது ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி  கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டு  சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் கலிதா ஜியா. இதனிடையே இந்த வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தன்னை ஜாமீனில் விட வேண்டும் என்றும்  முறையீடு செய்தார் ஜியா.

ALSO READ:  தேவர் ஜயந்தி விழா: முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பாஜக சார்பில் மரியாதை!

இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில்  ஒப்படைக்கப்பட்டன. உயர் நீதிமன்ற நீதிபதிகள் இனாயத்துர் ரஹ்மான், ஷாஹிதுல் கரீம் ஆகியோரைக் கொண்ட அமர்வில்இ ந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, கலிதா ஜியாவுக்கு 4 மாத இடைக்கால ஜாமின் அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தற்போது கலிதா ஜாமின் பெற்ற நிலையில் ,கலிதா ஜியா ஆட்சியின் போது அவர் மீது போடப்பட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளுக்காக கோமில்லா மாவட்ட  நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம்- கொல்கொத்தா-22 ஜனவரி 2025

பஞ்சாங்கம் ஜன.23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜன.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...