
நடுநிலை காபந்து அரசுக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என இத்தாலி அதிபர் மட்டெரேல்லா கோரியுள்ளார்.
இத்தாலியில் கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஐந்து நட்சத்திர இயக்கம், வலதுசாரி கட்சியான பேர்ஸா இத்தாலியா உடனே அல்லது மைய இடதுசாரி கட்சியான ஜனநாயக கட்சியுடனே கூட்டணி சேர மறுத்துவிட்டது.
இந்நிலையில், மூன்றாம் கட்டமாக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், இத்தாலி மீண்டும் போது தேர்தலைச் சந்திக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு முடிவு வரை ஒரு நடுநிலை காபந்து அரசை உருவாக்க வேண்டும் என்ற இரண்டு முடிவு மட்டுமே உள்ளது.
WHAT FOR SONIA IS WAITING IN INDIA ??