January 19, 2025, 2:28 PM
27.8 C
Chennai

மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தில் 17 பேர் கைது

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டார்கள் எனும் சந்தேகத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார். கோலாலம்பூரில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த இவர்களில் இருவர் அண்மையில்தான் சிரியாவில் மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து திரும்பியிருந்தனர் என தேசிய காவல் துறைத் தலைவர் காலித் அபு பக்கர் தெரிவித்துள்ளார். காவல் நிலையங்கள், ராணுவப் பாசறைகள் ஆகியவை அவர்களது திட்டமிட்ட இலக்குகளாக இருந்தன என்று மலேசிய உள்துறை அமைச்சர் அஹ்மத் ஜாகித் ஹமீது தெரிவித்துள்ளார். மலேசியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்ட வழிமுறைகள் குறித்த தீர்மானங்களை மலேசிய அரசு கடந்த வாரம் முன்வைத்தது. அதன் அடிப்படையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப் படுபவகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் காலவரம்பற்ற காவலில் வைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானம், அடக்குமுறை உள்நோக்கம் கொண்டது என்று மனித உரிமை அமைப்புகளும், எதிர்கட்சிகளுக்கும் குறை கூறியுள்ளன.

ALSO READ:  IND Vs SA T20: சஞ்சு அதிரடியில் அபார வெற்றி பெற்ற இந்தியா!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.