இமாம் மொஹம்மத் தவ்ஹிதி, தனது ட்விட்டர் பதிவில் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்! டிவிட்டர் என்னுடைய ட்வீட்டுகள் எல்லாம் பாகிஸ்தானின் சட்டத்தை மீறுவதாக எச்சரிக்கைத் தகவல் கொடுக்கும் போதெல்லாம் நான் கேட்க விரும்புவது அதே ட்விட்டர் பாகிஸ்தானுக்கு இதையும் சொல்லுமா என்பதுதான்! அது பயங்கரவாதத்தை ஊக்குவித்து ஆஸ்திரேலியா அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளின் சட்டங்களை மீறுகிறது என்பதைத்தான்!- என்று குறிப்பிட்டு இருக்கிறார்
அவருடைய கருத்துக்கு நிறைய பேர் பதில் கருத்து பதிந்துள்ளனர். அதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிலர் அவருக்கு ஆதரவாகவும் இந்தியாவை பாராட்டியும் பதிவிட்டுள்ளனர்!
இதே போல் இன்னொருவர் தனக்கு ட்விட்டரால் நேர்ந்த சங்கடத்தையும் பதிலாகப் பதிவிட்டுள்ளார்!
நான் ட்விட்டரின் சட்டம் மற்றும் ஊடக தொடர்பு துறைகளுக்கு கேள்வி கேட்டிருந்தேன். அதில் அமெரிக்க பிரஜையான நான் உங்களுடைய சேவையை பயன்படுத்தும் போது எதற்காக பாகிஸ்தானின் அடக்குமுறை மற்றும் மனித நேயமற்ற சட்டங்களுக்கு உட்பட வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை என்று #சிலிக்கான்வேலிஷரியா என்ற ஹேஷ்டேக் போட்டு பதிவிட்டிருந்தார்
இவ்வாறு நேர்வது உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும்கூட இவ்வாறு பதில் அளித்துள்ளது டிவிட்டர் என்று சிலர் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்
ஒருவர் டிவிட்டர் நிறுவனத்துக்கு பணம் வருவது சவுதி மூலமாகத்தான்! பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பு ஆதரவு வேறு டிவிட்டருக்கு உண்டு என்று பதில் அளித்திருக்கிறார்!
மேலும் ட்விட்டர் பலவித சட்டங்களை மீறி இருக்கிறது என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்!
When Twitter informs me that my tweets violate Pakistan’s Law, do they tell Pakistan that their support for terrorism violates laws of the UK, US and Australia?
— Imam Mohamad Tawhidi (@Imamofpeace) February 28, 2019