தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

கொரோனா: 125 பேராக உயர்ந்தது! ஒரே நாளில் 11 பேருக்கு பாதிப்பு!

தமிழகம், ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா: சிகிச்சையின் போது தப்பி சென்ற கூகுள் ஊழியரின் மனைவி! இருக்கும் இடத்தை மறைத்த மாமனார் மீதும் வழக்கு பதிவு!

மாவட்ட நீதிபதி தலையிட்டு, காவல்துறையின் உதவியோடுதான் அப்பெண்ணை மருத்துவர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

மருமகனோடு கள்ள உறவில் இருந்த மாமியார்! நேரில் கண்ட மகனை துண்டாக்கிய கொடூரம்!

இந்த நிலையில் தனது மகளுக்கு சுபனன் என்பவரை திருமணம் செய்து வைத்து அவரை வீட்டிலேயே மகளையும் மருமகனையும் தங்க வைத்து இருந்ததாக கூறப்படுகிறது

லாட்ஜில் தங்கி இருந்த காதலர்கள்! போலீஸால் நேர்ந்த கதி!

காதலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு காவலர்கள் மீது காவல்துறையினர் விசாரணை செய்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது

ரயிலில் தாய்பால் குடித்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

ராமேசுவரத்தில் இருந்து ரயிலில் சொந்த ஊர் திரும்பும் வழியில் தூக்கத்தில் தாய்ப்பால் குடித்த 5 மாத ஆண் குழந்தை மூச்சுத் திணறி இறந்தது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் லால்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் ஷா(36). கார் ஓட்டுநராக வேலை செய்துவரும் இவரது மனைவி பிரியங்கா(30). திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லாதிருந்ததால் நாட்டின் பல்வேறு கோயில்களுக்கும் சென்று வேண்டிக் கொண்டனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைப் பேறு கிடைத்ததையடுத்து, அமித் ஷா தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, அங்கிருந்து நேற்று முன்தினம் ராமேசுவரம்- பைசாபாத் விரைவு ரயிலில் சொந்த ஊருக்குப் புறப்பட்டார். ரயிலில் வரும்போது, நேற்று அதிகாலை தூங்கிக்கொண்டே பிரியங்கா தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டியுள்ளார். அப்போது மூச்சுத்திணறி குழந்தை இறந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை அந்த ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, குழந்தை அசைவற்றுக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, குழந்தையை தூக்கிச் சென்று ரயில் நிலையத்தில் உள்ள மருத்துவர்களிடம் காட்டினர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத்திணறி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையறிந்த அமித் ஷா குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர், கும்பகோணம் இருப்புப்பாதை போலீஸார் குழந்தையின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் முன்னிலையில் கும்பகோணம் பெருமாண்டி சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர். நேர்த்திக்கடன் செலுத்துவதற் காக குழந்தையுடன் மகிழ்ச்சியாக வந்த அமித் ஷா குடும்பத்தினர், குழந்தை இல்லாத நிலையில் சோகத்துடன் வேறு ரயிலில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

கொரோனா: கர்நாடகாவில் மேலும் 2 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

என் பொண்டாட்டி.. அடிச்சேன்! பொது இடத்தில் அறிமுகமில்லா பெண்ணை அடித்த நபர்!

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்கப்போது, மீண்டும் கன்னத்தில் அடித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை!

அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

80 வயது கூட பாட்டிய விட மாட்டிக்கீறிங்களேடா! பாலியல் தொந்தரவு!

80 வயது மூதாட்டி பிச்சையெடுத்து பிளாட் பாரத்தில் வசித்து வந்தார்,

வீட்டில் தனியே இருந்த மாணவி! தந்தையின் நண்பரே செய்த செயல்..!

அப்போது வீட்டில் யாருமில்லை. வீட்டில் மாணவி மட்டும் இருந்துள்ளார்.

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: மார்ச் 31 ல் துவக்கம்!

இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 44 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உஷார்: எப்படியெல்லாம் திருடுறாங்கப்பா? ஏடிஎம் -ல் முதியவர் இழந்த பணம்!

னது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும் மெசேஜ் வந்தும் அதை ராஜேந்திரன் கவனிக்காததால் அவர் அதுகுறித்து எச்சரிக்கை அடையாமல் விட்டுவிட்டார்.
Exit mobile version