நடிகை சஞ்சிதா ஷெட்டி ‘சூது கவ்வும்’ படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.
இவர் நடித்த ‘பார்ட்டி’ படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால், இந்த சந்தோஷத்தை கூட, கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார் அவர். காரணம், சமூக வலைதளங்களில், வெளியிடப்பட்ட அவரது ஆபாச புகைப்படங்கள்தான். நான் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.
அதை சீர்குலைப்பது போல், இப்படி, யாரோ சில சதிகாரர்கள் செய்த சூழ்ச்சியால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன்’ என புலம்பி வந்தார். ஆனால், அவற்றை கடந்து இப்போது மீண்டும் படங்களில் பிசியாகியுள்ளார் அம்மணி. சமீபத்தில், இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.