- Ads -
Home புகார் பெட்டி சாமி ஊருக்குள்ள வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாதாம்!

சாமி ஊருக்குள்ள வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாதாம்!

hrce office chennai

இந்துசமய அறநிலையத்துறை அனைத்து கட்டளைதாரர்களிடம் சாமி எங்கள் ஊருக்கு வரும் போது பட்டாசு வெடிக்கமாட்டோம். அப்படி பட்டாசு வெடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்களே பொறுப்பு என எழுதி வாங்கியுள்ளனர்.

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் திருவிழாவின் போதும் மற்றும் சாமி மலையேறும் நிகழ்ச்சியின் போதும் வருடந்தோறும் தொன்றுதொட்டு வாணவேடிக்கை நடப்பது வழக்கம். ஆனால் இந்துசமய அறநிலையத்துறை இந்த வருடம் வாணவேடிக்கை முற்றிலுமாக நடத்தக்கூடாது என தடை விதித்துள்ளனர்.

ஒருவருடத்திற்கு முன்பு கேரளாவில் கோவில் திருவிழாவின் போது நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் அங்குகூட இந்த ஆண்டு வாணவேடிக்கை நடத்த அரசு அனுமதியளித்தது.

ஆனால் திருச்செங்கோடு தேர்த்திருவிழாவின் போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடக்கும் வாணவேடிக்கையை இந்துசமய அறநிலையத்துறை தடுப்பது ஏன்?

கோவில் கணக்குகள் ஒழுங்காக இல்லை.

கோவிலை சுத்தமாக வைப்பதில்லை.

இலவச காலணி காப்பகம் இல்லை.

கைலாசநாதர் கோவிலில் பக்தர்களுக்கு கழிப்பிடம் இல்லை.

கோவிலுக்கு தானமாக கொடுத்த அனைத்து மாடுகளும் கசாப்பு கடைகளுக்கு சென்றுவிட்டது.

கோவிலில் போதுமான பணியாளர்கள் நியமிக்கவில்லை.

மொத்தத்தில் கோவில் நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த அருகதை இல்லை.

ஆனால் தொன்றுதொட்டு வரும் வழக்கங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதில் இந்த அறங்கெட்டதுறை முழுமுனைப்பாக செயல்படுகிறது.

ஏற்கனவே பத்ரகாளியம்மன் கோவிலின் தேரோட்டம் இரவில் நடப்பதை அனுமதிக்காத அறநிலையத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றி பகலில் தேரோட்டம் நடத்தியது.

தற்போது வாணவேடிக்கை நடத்தக்கூடாது என கட்டளைதாரர்களிடம் எழுதி வாங்குகிறது.

நாளை திருவிழாவே நடத்தக்கூடாது என எழுதி வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படாதே…

பட்டாசு வெடிப்பது எமது உரிமை.

இந்து சமய அறநிலையத்துறையே…

இந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படாதே…

அது அறநிலையத்துறைக்கு பிடிக்கவில்லை எனில் கோவிலை விட்டு வெளியேறு….

நமது வழிபாட்டு உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க அனுமதியோம். அறநிலையத்துறையின் இந்த அறங்கெட்ட செயலை எதிர்த்து பக்தர்களும், பொதுமக்களும் நமது கண்டனங்களைத் தெரிவிப்போம்…

போராடுவோம்… வெற்றி பெறுவோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version