- Ads -
Home புகார் பெட்டி தட்டிக் கேட்க யாருமில்லையா?

தட்டிக் கேட்க யாருமில்லையா?

தமிழகத்தில் செய்தியாளர்களுக்கு நிகழும் மனித உரிமை மீறல்களை துணிந்து தட்டிக் கேட்க யாருமில்லையா..

நமது செய்தியாளர்கள் பலர் அரசியல்வாதிகள் , சமூக விரோதிகள், அதிகாரிகள் போன்ற பலரால் அவப்போது கடுமையாக தாக்கப்படுவதை செய்திகளின் வாயிலாக பார்க்கிறோம் , கேட்கிறோம்..தாக்கப்பட்ட செய்தியாளர்கள் எங்கள் சங்க உறுப்பினர் இல்லை.ஆதலால் எங்கள் ஆதரவு இல்லை….அவன் ஏதாவது செய்திருப்பான் யா…நாம எதுக்கு மூக்கை நுழைக்கனும்…சங்கத்துக்கு ஏதும் செய்வதில்லை அந்த செய்தியாளர் ,..கண்டுகாதையா…இதுபோன்ற பல காரணங்கள் கூறி செய்தியாளருக்கு ஆதரவாய் உதவ முன் வருவதில்லை..தனக்கு, தன் குடும்பத்திற்கு வருவாய் தேடவே பல செய்தியாளர்கள் போராடுவதை கண்கூடாக பார்க்கிறோம்..அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறார்கள் பல செய்தியாளர்கள்..

இங்கு நம்முடன் வாழும் சக செய்தியாளருக்கு கண்முன்னே நிகழும் மனித உரிமை மீறல்களை தட்டிக் கேட்க நம்மால் முடியாததை கண்டு வேதனை தான் மிஞ்சுகிறது…என்றைக்கு ஒற்றுமையோடு ஒன்று கூடி போராடி நம் உரிமைகளை நிலைநாட்ட நம்மால் முடிகிறதோ , அன்றுதான் உண்மையான பத்திரிக்கை சுதந்திரம் கிடைத்ததாக நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம்…..செல்வந்தர்கள் செய்தியாளர்கள் பத்திரிக்கை சங்க பதவிகளில் அமர்ந்து தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட அக்ரெடேஷன் அட்டை வைத்திருக்கும் நிலை மாற வேண்டும்…..

செய்தி:  விஸ்வரூபம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version