- Ads -
Home கல்வி மூன்று முதன்மை பாடங்களை தேர்வு செய்வது.. அரசாணை ரத்து!

மூன்று முதன்மை பாடங்களை தேர்வு செய்வது.. அரசாணை ரத்து!

school

மேல்நிலை கல்வியில் மூன்று முதன்மை பாடங்களை தேர்வு செய்வதன் மூலம் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறையுமென்பதால், தொடர்ந்து 4 முதன்மை பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அரசாணையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து, புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில், 2020 – 21 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது, அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் சுருங்க நேரிடும் என்பதால், 4 பாடத் தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும், பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினையும் ஏற்று முந்தைய அரசாணையை ரத்து செய்வதுடன், நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும், அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த உத்தரவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version