- Ads -
Home வேலைவாய்ப்பு ஊதியம் மாதம் ரூ. 56,100..! டி.என்.பி.எஸ்.சி!

ஊதியம் மாதம் ரூ. 56,100..! டி.என்.பி.எஸ்.சி!

jobs

டி.என்.பி.எஸ்.சி. புதிய அரசு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் காலிப் பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

குறைந்தது மாதம் ரூ. 56 ஆயிரம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 26-ம் தேதியே கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணி குறித்த விபரங்கள்-

காலியிடங்கள் எண்ணிக்கை – 29

சம்பளத் தொகை – மாதம் ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை

கல்வி தகுதி – முதுகலைப் பட்டம், பி.இ., கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் உள்ளன….

வயது வரம்பு – எஸ்சி. எஸ்டி. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து வகுப்பை சேர்ந்த விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது. மற்றவர்கள் 01.07.2022 அன்று 32 வயதை தாண்டியிருக்க கூடாது.

பதிவுக் கட்டணம் – ரூ. 150

தேர்வுக் கட்டணம் – ரூ. 200 -ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை – எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 26.03.2022

கூடுதல் விபரங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிக்கையை க்ளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள் –

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version