புது தில்லி:
புது தில்லிக்கு வந்திருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னைக்கு இன்றோ நாளையோ வர வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் அவர் சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், சசிகலா நாளை பதவியேற்பதில் திடீர் சிக்கல் முளைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக சசிகலா நாளை பதவியேற்க மாட்டார் என தகவல் வெளியானது. அவர் பிப்.9ம் தேதி பதவி ஏற்கக் கூடும் என்று கூறப்பட்டது.
இருப்பினும், ஆளுனர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அவர் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தில்லியில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அவர் தில்லியில் இருந்து மும்பைக்குச் செல்வதாகவும், அவர் சென்னைக்கு இன்று வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.