சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். பாகிஸ்தான் ரசிகர்கள் அணியை திட்டித் தீர்த்தனர். பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தானில் பல இடங்களில் இந்தப் போட்டியைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. போட்டியைக் கண்டு கொண்டிருந்த ரசிகர்கள், பெரும் டென்ஷன் அடைந்தனர். அதுவும், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததும் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர்கள், பல இடங்களில் டிவி.,க்களை அடித்து உடைத்தனர்.
And we will keep facing disappointment by defeats such as the one today. https://t.co/noxfc7srWN
— Imran Khan (@ImranKhanPTI) June 4, 2017
ரசிகர்கள் மட்டுமின்றி, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். டுவிட்டரில் தொடர்ச்சியாக கருத்துகளை பதிவிட்ட இம்ரான் கான், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை சரமாரியாக சாடினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை என்றால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான இடைவெளி மேலும் நீடிக்கும் என குறிப்பிட்டார். மேலும், தோல்வியும், வெற்றியும் விளையாட்டின் அங்கம் என ஒரு விளையாட்டு வீரரான எனக்கும் தெரியும். ஆனால் பாகிஸ்தான் எந்த ஒரு நெருக்கடியும் கொடுக்காமல் இந்தியாவால் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டு வருவது பெரும் வலியைத் தருகிறது என தெரிவித்துள்ளார்.
The gap between Indian and Pakistani teams is bigger than ever! India has evolved & we are way behind now 1/2
— Shahid Afridi (@SAfridiOfficial) June 4, 2017
இந்தத் தோல்விக்குப் பின் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. இது குறித்து கருத்து தெரிவித்த அப்ரிடி, ‘இந்தியா – பாகிஸ்தான் இடையில் ஒரு போட்டி நடக்கிறது என்றால், நம்மை அறியாமல் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்ளும். ஆனால் எதிர்பார்ப்புகளைத் தகர்த்தெறிவது போல்தான் போட்டி அமைந்தது. ஒரு பாகிஸ்தான் ஆதரவாளராக இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இந்தியா முதலிலிருந்தே போட்டியை வெல்வது போல்தான் ஆடியது. கடைசி வரையிலும் அதை அப்படியே தக்கவைத்துக் கொண்டது. என்று கூறியுள்ளார்.
This is for ppl like @imVkohli @msdhoni. Guys Nation will always stand with u BUT do u stand with our Soldiers?
We know @BCCI is shameless pic.twitter.com/xZWnLIm1lr
— #GauravPradhan ?? (@DrGPradhan) June 3, 2017
இதனிடையே, பாகிஸ்தானுடன் ராணுவ உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இப்படி ஒரு போட்டி தேவையா என்று கேள்வி எழுப்பினர் பலரும். இந்திய ராணுவம், இனி இந்திய கிரிக்கெட்டர்களுக்கு மரியாதை அளித்து, அவர்களின் உடையை அணிவித்து அழகு பார்க்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ராணுவம் பரிசீலிக்கிறது என்று சிலர் டிவிட்டரில் கூறியிருந்தனர்.
From sources have come to know that Indian Armed forces will stop giving honour and uniform to cricketers after yesterday’s match.Good news. pic.twitter.com/DcvvvSCj3V
— Kalpana Subramaniam (@KalpanaSubrama5) June 5, 2017
गावस्कर 1 ग़लत फ़ैसले के ख़िलाफ़ टीम को मैदान से बाहर ले गये थे !@BCCI आप खेल रहे हो उनसे
जिन्होंने हमारे भाईयों का क़त्ल किया?
##INDvPAK pic.twitter.com/sznzE4OYhm— Maj Surendra Poonia (@MajorPoonia) June 4, 2017