- Ads -
Home இந்தியா நில ஆவணங்களுக்கு கட்டாயமாகிறது ஆதார்: இணைக்காவிடில் பினாமி சட்டத்தில் நடவடிக்கை!

நில ஆவணங்களுக்கு கட்டாயமாகிறது ஆதார்: இணைக்காவிடில் பினாமி சட்டத்தில் நடவடிக்கை!

aadhaar
AADHAAR

புது தில்லி:
நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; அவ்வாறு ஆதார் எண் இணைக்காதவர்கள் மீது பினாமி பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
• நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை உரிமையாளர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்
• ஆதார் எண் இணைக்காவிடில் பினாமி பண பரிவர்த்தனையின் கீழ் சட்டப்படி நடவடிக்கை
• 1950ம் ஆண்டு முதலான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்
• ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்
• மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் எண் அவசியம்
• மதிய உணவு முதல் வங்கிக் கணக்கு வரை ஆதார் எண் இணைக்கப் பட வேண்டும்.
• ரியல்எஸ்டேட் துறையில் அதிக கறுப்பு பணப் புழக்கத்தை கருத்தில் கொண்டு, நிலம் வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
இவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version