மகள்களுக்கு முன்னால் சுடப்பட்ட உத்தரபிரதேச பத்திரிகையாளர். மருமகளை துன்புறுத்திய புகார் தொடர்பான தாக்குதல் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.
மகள்களுக்கு முன்னால் சுடப்பட்ட உத்தரபிரதேச பத்திரிகையாளர், மருமகளை துன்புறுத்தல் புகார் தொடர்பான தாக்குதல் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் ஒரு பத்திரிகையாளர் மீது திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காசியாபாத்தில் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 5 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
தில்லி அருகே காசியாபாத்தில் நேற்று இரவு ஒரு உத்தரப்பிரதேச பத்திரிகையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். விக்ரம் ஜோஷி என அடையாளம் காணப்பட்ட பத்திரிகையாளர் நேற்று இரவு தனது மகள்களுடன் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது,அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
காசியாபாத்தின் விஜய் நகர் பகுதியில் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி தெரியாத நபரால் ஒரு தோட்டா விக்ரம் ஜோஷியின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் உத்தரபிரதேச பத்திரிகையாளர் காசியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேச பத்திரிகையாளர் மீதான தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். பத்திரிகையாளர் மீதான தாக்குதல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சி.சி.டி.வி காட்சிகளில் விக்ரம் ஜோஷி தனது மகளுடன் பைக்கில் செல்வது தெரிகிறது. ஒரு அடையாளம் தெரியாத கும்பல் அவரைத் தடுத்து அவரைத் தாக்கத் தொடங்கின இதற்கிடையில், மகள் ஓடிப்போவது அதில் தெரியவந்துள்ளது.
பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் ஜோஷியை ஒரு காரை நோக்கி இழுத்துச் சென்று அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவரைத் தாக்கினர். விக்ரம் ஜோஷி சாலையில் கிடந்ததால் பின் அவரது மகள் அவரது மேலே அமர்ந்து அழுதுகொண்டு உதவிக்காக அலறுவதைக் காணலாம்.
இந்த தாக்குதலானது அவரது மருமகளை ஒரு கும்பல் துன்புறுத்தியது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த புகாருடன் தொடர்புடையது என்று பத்திரிகையாளரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விக்ரம் ஜோஷியின் சகோதரர் அனிகேத் ஜோஷி, உ.பி. பத்திரிகையாளர் சமீபத்தில் விஜய் நகர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை சமர்ப்பித்ததாகக் கூறினார். அதில் ஒரு கும்பல் தனது மருமகளுடன் தவறாக நடந்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார். புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கைது செய்யப்படவில்லை என்று பத்திரிகையாளரின் சகோதரர் செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார்.
பத்திரிகையாளரின் மருமகளுடன் தவறாக நடந்து கொண்ட சிறுவர்களால் தனது சகோதரர் தாக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். பத்திரிகையாளர் மீதான தாக்குதல் தொடர்பாக ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டதாக காஜியாபாத் எஸ்.எஸ்.பி. கூறினார்.
Increasing crime in UP!!!
— Sanjay Sarraf ( Kaizen Law ) (@sanjay_sarraf) July 21, 2020
Journalist Vikram Joshi shot dead after he complained to the police about his niece being harassed by a group of men in Ghaziabad near Delhi last night. pic.twitter.com/XSAqMcrkik
Station in-charge suspended and departmental inquiry initiated after family of journalist attacked in Ghaziabad alleged inaction by police.
— ANI UP (@ANINewsUP) July 21, 2020
Total nine people have been arrested in the matter, efforts to nab another accused underway. https://t.co/Y6OqROFUew