- Ads -
Home இந்தியா கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை!

கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை!

Vivek rai
Vivek rai

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேக் ராய் தற்கொலை செய்து கொண்டார்.

தினமும் கொரோனா வார்டில் நிகழும் மரணங்களால் கடும் மன அழுத்தத்தில் அவர் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version