புதுதில்லி தில்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்றது. இதில் முறையான அங்கீகாரம் இல்லாத 4 நிறுவனங்களிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ.2 கோடி தேர்தல் நிதியாகப் பெற்றது. இதுகுறித்து அந்தக் கட்சி நன்கொடை பெற்ற விவரத்தில் வெளியிடவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி ஆம் ஆத்மி கட்சிக்கு மத்திய வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.