பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் வாதாட எதிர்ப்பு தெரிவித்த அன்பழகன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், பவானிசிங் நியமனத்தை எதிர்த்து, தி.மு.க.,வின் அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அன்பழகனின் மனுவை தள்ளுபடி செய்தது. பவானிசிங் அரசு வழக்கறிஞராக தொடர்வதற்கு கர்நாடக அரசின் மறு உத்தரவு தேவையில்லை என்றும், பவானிசிங் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டால், வழக்கின் இறுதிவரை அவரே அரசு வழக்கறிஞராக ஆஜராகலாம் என்றும் அது கருத்து தெரிவித்துள்ளது.