காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன், நீரஜ்குமார் சிங் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. தில்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அசோக சக்ரா விருதுகளை வழங்கினார். மேஜர் முகுந்த் வரதராஜனுக்கான அசோக சக்ரா விருதினை அவரது மனைவி இந்து குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். இதே போல நீரஜ்குமார் சிங் வீரத்தை பாராட்டி வழங்கப்பட்ட, அசோக சக்ரா விருதினை அவரது மனைவி பர்மேஸ்வரி தேவி பெற்றுக் கொண்டார். இந்திய கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 12 பேருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.