புது தில்லி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர் ஒபாமா, விருந்தினர்களுக்கான புத்தகத்தில் காந்தி பற்றி எழுதிய குறிப்பில், மகாத்மா காந்தி உலகிற்கு கிடைத்த அரிய பரிசு. காந்தியை பற்றி மார்ட்டின் லூதர் கிங் அன்று சொன்னது இன்றும் மாறாமல் தொடர்கிறது. இந்தியா முழுவதும் காந்தியை பற்றிய உணர்வு இன்றும் உயிர்ப்புடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.