புதுதில்லி பா.ஜ.க.,சார்பில் புது தில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியிடம் இரண்டு வாக்காளர் அட்டை இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தேர்தல் தேர்தல் ஆணையம் தெரிவித்த தகவல்: பா.ஜ, சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிரண் பேடி பெயரில் உதய் பார்க் மற்றும் தல்கட்டோரா லேன் ஆகிய பகுதிகளில் வசிப்பவராக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது எந்த முகவரியில் உள்ள அடையாள அட்டையை பயன்படுத்தினரோ அதை தவிர்த்து பிற அடையாள அட்டை செல்லாதது என ஆக்கப்படும் என தெரிவி்த்துள்ளது.