பெண்களுக்கு சிறப்பு பணியாளர்களுக்கான நிரந்த கமிஷன் அமைக்க இந்திய ராணுவ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் போர் நடக்கும் பகுதி அல்லாத பல்வேறு பணிகளை ராணுவ வீராங்கனைகளை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சிறிய அளவிலான சேவை கமிஷன் விவாகரத்திற்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த சிறப்பு பணியாளர்களுக்கான நிரந்த கமிஷன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் ஆறு பிரிவுகளில், பெண்கள் சிறிய அளவிலான சேவை கமிஷநில் 10+4 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் அவர்கள் நீதிபதி அட்வகேட் ஜெனரல், இமேஜ் இன்டரப்டர், மொழி, சைபர் மற்றும் தொழிற்நுட்பம், விமான போக்குவரத்து கட்டுபாடு மற்றும் சேவை தேர்வு போர்டு ஆகியவற்றில் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
ராணுவத்தில் பத்தாண்டு பணியாற்றிய பின்னர், பெண்கள் ஒய்வு பெறலாம் அல்லது மேலும் நான்கு ஆண்டுகள் பணியாற்றலாம், ஆனால் ஆண்கள் நிரந்தர கமிஷனுக்கு மாற்றப்படலாம்.
பெண் ராணுவ அதிகாரிகளை போர் நடக்கும் பகுதிகளில் பணியமர்த்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.