அப்போது, தமிழகமும் இந்தியாவில் தான் இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் வரமுடியும் எனக் கூறி அதிமுக, காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சல் எழுப்ப, உடனே சுதாரித்து கொண்ட கிரண் ரிஜ்ஜு, “இலங்கையில் இருந்து அகதிகள் வருகிறார் என்றுகூறுவதற்கு பதிலாக வாய் தவறி கூறிவிட்டேன்” எனத் தெரிவித்தார். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எம்பிக்களை சமாதானம் செய்தார். இதன்பின்னரே அமைதி நிலவியது.