- Ads -
Home இந்தியா மருமகள் வைத்த மட்டன் குழம்பு; மாமனார் மரணமடைந்த பரிதாபம்…..!

மருமகள் வைத்த மட்டன் குழம்பு; மாமனார் மரணமடைந்த பரிதாபம்…..!

murder

மருமகள் சமைத்த ஆட்டுக்கறி குழம்பு சுவையாக இல்லை என்று கூறி தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் சுவற்றில் முட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வி கோட்டா மண்டல் பகுதியை சேந்தவர் செல்ல குருப்பா (65). கடந்த ஞாயிறன்று வீட்டில் ஆட்டுக்கறி சமைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்காக அமர்ந்துள்ளனர்.

அப்போது தனக்கு உணவு பிடிக்கவில்லை, ஆட்டுக்கறி சுவையாக இல்லை என்று கூறி குருப்பா தகராறில் செய்துள்ளார்.

மேலும் சாப்பாட்டு தட்டை, உணவு சமைத்த தனது மருமகள் மீது தூக்கி வீசியுள்ளார். இதில் அப்பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் குறையாமல் மருமகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் கோபடைந்த அவரது மகன், தந்தை குருப்பாவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் குருப்பா எந்தவித சமாதானத்திற்கும் கட்டுபடாமல் மீண்டும், மீண்டும் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் தந்தை மகன் இருவருக்கும் கைகலப்பு வந்துள்ளது. இதையடுத்து குருப்பாவை மகன் சுவற்றி முட்டி தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து குருப்பா சுயநினைவிழந்து மயங்கி விழுந்து இறந்தார்.

இந்த குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த குருப்பாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலையில் தொடர்புடைய குடும்பத்தினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய வி. கேட்டா மண்டல் எஸ்.ஐ ரவிபிரகாஷ் ரெட்டி,

குருப்பாவை அவரது மகன் தாக்கி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த கொலையில் குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உள்ளது.

இதனால் சம்பவம் நடந்த போது உடனிருந்த அனைவரையும் கைது செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version