'பத்மாவதி' என்ற வரலாற்றுப் படம்ஒன்றை எடுத்து வந்தார் பாலிவுட் இயக்குநர் சஞ்சை லீலாபன்சாலி. இதில்பத்மாவதி ராணியை தவறாக சித்தரித்து படம் எடுப்பதாகக் கூறி இயக்குநர் சஞ்சை பன்சாலி கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கப்பட்டார். இதற்கிடையே, மத்தியபிரதேச பா.ஜ.க நிர்வாகி அகிலேஷ் என்பவர், 'வரலாற்றை தவறாக சித்தரிக்க முயற்சிக்கும் இயக்குநர் பன்சாலியை செருப்பால் அடிப்பவர்களுக்கு ரூ.10,000 வழங்குவேன். தங்களது சுய விளம்பரத்துக்காக, வரலாற்றை தவறாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள்' எனக்கூறியுள்ளார்.