அவனியாபுரத்தில், வரும் 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அக்கிராம குழுவினர் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இக்குழுவினர் இன்று தமிழக முதல்வரை சந்தித்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்; ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல்வேறு நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், போராடிய மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வரும் 5 ம் தேதி அவனியாபுரத்திலும், 10ம் தேதி அலங்காநல்லுாரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இவ்வாறு குழுவினர் தெரிவித்தனர்.
*அவனியாபுரத்தில் பிப்.5ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
*ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு நன்றி
*பாலமேட்டில் பிப்ரவரி 9ம் தேதி ஜல்லிக்கட்டு என்று முதல்வரை சந்தித்த பின் விழாக்குழுவினர் அறிவித்தனர்