- Ads -
Home சற்றுமுன் அவனியாபுரத்தில் வரும் 5ம் தேதி ஜல்லிக்கட்டு

அவனியாபுரத்தில் வரும் 5ம் தேதி ஜல்லிக்கட்டு

அவனியாபுரத்தில், வரும் 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அக்கிராம குழுவினர் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இக்குழுவினர் இன்று தமிழக முதல்வரை சந்தித்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்; ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல்வேறு நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், போராடிய மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வரும் 5 ம் தேதி அவனியாபுரத்திலும், 10ம் தேதி அலங்காநல்லுாரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இவ்வாறு குழுவினர் தெரிவித்தனர்.
*அவனியாபுரத்தில் பிப்.5ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
*ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு நன்றி
*பாலமேட்டில் பிப்ரவரி 9ம் தேதி ஜல்லிக்கட்டு என்று முதல்வரை சந்தித்த பின் விழாக்குழுவினர் அறிவித்தனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version