தீபக்கின் திடீர் போர்க்கொடிக்கு பின் நடராஜன் உள்ளார் என செய்திகள் அலையடிக்க தொடங்கியுள்ளன.
சசிகலாவின் ஒப்புதலோடு தான் தீபக் பேசுவதாகவும் கருத்து நிலவுகிறது. ஒபிஎஸ்சை துணை பொது செயலாளராக்குவது தேவைப்பட்டால் முதல்வராக ஒபிஎஸ்சும், துணை முதல்வராக பழனிசாமி என பல திட்டங்கள் ஆலோசனையில் உள்ளதாம்.
சசிகலாவிடம் நடராஜன் தெளிவாக ஒன்றை சொல்லியுள்ளராம் "நீ முதல்வராவது நடைமுறையில் நடைபெறாத ஒன்றாகிவிட்டது, கட்சி பதவி மட்டும் போதும் எதற்காக மக்களிடம் கெட்ட பெயர் வாங்க வேண்டும். கட்சி, ஆட்சி இரண்டையும் கட்டுபாட்டில் வைக்க வேண்டுமானால் சில தியாகங்களை செய்து தான் ஆகவேண்டும் அதற்கு சம்மதித்தால் மட்டுமே வெளியில் வரும் போது கட்சி தொண்டர்களின் முழு ஆதரவோடு செயல்பட முடியும்" என்றுள்ளார்.
தீவிர யோசனைக்கு பின் நடராஜனின் யோசனைக்கு சசிகலாவும் சம்மதித்துள்ளார். இனி காட்சிகள் விறுவிறுப்டையும் என இரு தரப்பு அதிமுகவினரும் கூறுகின்றனர்.