*மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம்: ஈஷா யோகா விழாவில் மோடி பேச்சு*
*கோவை அடுத்து வெள்ளியங்கிரில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயர பிரம்மாண்ட ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.*
*பின்னர் அவர் பேசியதாவது, எல்லோருக்கும் வணக்கம் என தமிழில் பேசி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.*
*இந்த மகாசிவராத்திரியில் ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.*
*மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம். கடவுள்கள் பல இருந்தாலும் மகாதேவன் ஒருவரே.*
*இயற்கை பாதுகாப்பை இந்த சிவராத்திரி வலியுறுத்துகிறது.*
*வேறுபாடுகளுக்கு அப்பால் , பக்தியால் நாம் இன்று ஒன்றுபட்டிருக்கிறோம்.*
*இன்று யோகா பயிற்சி உலகம முழுவதும் பரவலாகி வருகிறது.*
*இந்த யோகா கலையை அதன் ஆத்மார்த்தமான சாராம்சத்துடன் காப்பாற்றுவது முக்கியம். என்னில் தொடங்கி நம்மில் முடிவதே யோகாவின் சிறப்பு.*
*இமாலாயா-கன்னியாகுமரி இணைப்பு சிவன் பார்வதி இணைப்பை போன்றது என கூறினார்.*
*இந்திய நாகரிகத்தின் உதாரணம்*
*காடு மலை மரம், பறவை உள்ளிட்ட இயற்கையின் ஆன்மிகமே கடவுளிலும் உள்ளது. மூதாதையர்கள் வாழ்ந்த வழிமுறை இந்திய நாகரிகத்தின் உதாரணம்.*
*மூதாதையர்களின் வழிமுறை என காரணம் காட்டி ஒதுக்குவது ஆபத்தானது*
*பெண்களின் முன்னேற்றம்*
*பெண்களின் முன்னேற்றம் இல்லையேல் மனித நேயத்தில் முன்னேற்றம் இல்லை.*
*பெண்களின் தெய்வீக அந்தஸ்து நிபந்தனையற்றது. கலாசாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது.*
*ஆனால் ஆண்கள் நன்மை செய்தால் மட்டுமே தெய்வீக அந்தஸ்தை பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளது.*
*புதிய சிந்தனைகளை வரவேற்பது நமது சமூகம். பழமையான சிந்தனைகளை ஆய்வு செய்து புதுப்பித்துக்கொள்கிறோம்.*
*ஆன்மிகம் ஒன்றே*
*உலகில் பல மொழிகள் இருந்தாலும் ஆன்மிகம் என்பது ஒன்றே . யோகாவை உலக நாடுகளுக்கு இந்தியா பரிசாக அளித்துள்ளது. ஜூன் 21 சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நான் என்னும் பயணத்தில் துவங்கி நாம் என்பதில் முடிவதே யோகா.யோகா என்பது நோயிலிருந்து விடுபடக்கூடியது என மோடி கூறினார்.*