புது தில்லி:
வங்கிக் கடன் ஏய்ப்பு விவகாரத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாட்டில் வாழ்ந்து வந்த கிஷ்பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா இன்று லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காட்லாண்ட் யார்ட் போலீசார் லண்டனில் செவ்வாய்க்கிழமை இன்று கைது செய்யப்பட்டார். வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தின் அவர் இன்று ஆஜர்படுத்தப் படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கார்பரேட் மோடி அரசின் வேண்டுகோளின் அடிப்படையில் ஏழை விவசாயி விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.