விருதுநகர்:
முதல்வர் பதவியை காப்பாற்றவும் பெறவும் அதிமுகவினர் தில்லி செல்கின்றனர் என்று கனிமொழி எம்.பி., கூறினார்.
தேர்தல் வந்தால் தமிழக முதல்வராவது குறித்து யார் கனவு காண்கிறார்கள் என்பது தெரிய வரும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பதிலளித்துள்ளார்.
கனிமொழி இன்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், முதல்வர் பதவியைப் பெறுவதற்காகவும் அதிமுகவினர் மாறி மாறி தில்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்து வருகின்றனர் என்று கூறினார்.